“எவ்வளவு உழைச்சும் போதாது...”
“எவ்வளவு உழைச்சும் போதாது...”
“ஒவ்வொரு நாளையும் கழிப்பதே பெரும்பாடாக இருக்கு…”
ஹலாலான முறையில் பணக்காரனாக வாழ்தல் என்பது தனது அடிப்படை தேவைகளை நிறைவேற்றி தன்னிறைவான வாழ்க்கை வாழ்ந்து மேலதிகமாக Bank Balance ஐ வைத்திருத்தலாகும்.
: “அந்த Secret ஐ நான் சொல்றன்.. 🩵”
: “இந்த Post காசைப் பற்றி மட்டும் தான்..
”



“உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத உயிரினம் ஒன்றுமே பூமியில் இல்லை.”
(அல்குர்ஆன்: 11:6)


1. தனக்கான செலவு
2. தனது குடும்பத்துக்கான செலவு
3. ஸதகா, ஸகாத்
இவை அனைத்தும் அல்லாஹ்வுக்காக நடைபெற வேண்டும். குடும்பத்தலைவனான ஆணுக்குக் அல்லாஹ் வழங்கும் வருமானமானது அவருக்கும், அவரின் மீது தங்கிவாழ்வோருடைய செலவிற்கும் சேர்த்துத் தான்; அது நீதியான முறையில் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். பெண்ணின் வருமானம் பெண்ணுக்குரியது.



“இப்படி நீங்கள் நடக்காவிட்டால் அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் போர் செய்யத் தயாராகி விடுங்கள்.”
(அல்குர்ஆன்: 2:279)

- மனைவி வந்து வாழ்வதற்காக தன் வசதிக்கேற்ற வீடு,
- மனைவிக்கு கொடுப்பதற்காக மஹர்,
- அன்றாட செலவுகளுக்கான வருமானமீட்டக் கூடிய தொழில்,
- மனைவிக்கும், அவள் மூலம் தனக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கும் செலவழிக்க வேண்டும் என்ற மனநிலை
என்பவற்றை தயார் செய்ய வேண்டும். அதிலேயே பாதி பணக்காரனாகி விட முடியும்.

“ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்டு நற்செயல்களைச் செய்கிறார்களோ அவர்களுக்கு மன்னிப்பும் உண்டு; கண்ணியமான உணவும் உண்டு.”
(அல்குர்ஆன்: 22:50)

- Zulfa Zubair -
“எவ்வளவு உழைச்சும் போதாது...”
Reviewed by Asri Ibnu Ameer
on
September 26, 2023
Rating: 5

No comments