Breaking News

யாதும் நீயே 18...



         அவனவள்   


ஆதி அவளைக் கண்ட அதிர்ச்சியில்    " நீயா" என்று கேட்க

 " ஆமா நானே தான்   , பரவாயில்லை மறந்து இருப்ப என்று நினைச்சேன் " 

   " நீ எல்லாம் ஒரு பொண்ணா ச்சீ    அவளும் உன்னை மாதிரி ஒரு பொண்ணு தானே.  


அவளைப் போய்

 விபச்சாரி என்று பேஸ் புக்ல ரேட் பேசினவ தானே " 

என்றான் ஆதி.

     

    " டேய் நான் காயத்ரி டா, என்ன விட அவள் எந்த வித்துல உசந்து போனா என்று அவள கட்டிகிட்ட .  அதான் பன்னேன் "


ஆதி : " உன்னை விட எல்லா விதத்திலும் என் அபி உசந்தவ தான்" 

    " எது அவளா தத்த த பித்த்த என்று பேசுவாளே அவளா"

என்று காயத்ரி அபிக்கு ஏளனம் செய்ய 

          ஒரு அடி தள்ளிப் போய் விழுந்தாள்.


       ஆம் அதி அவள் ஒரு பெண் என்று கூடப் பாறாமல் கண்ணத்தில் அனைத்திருந்தான்.


     " டேய் நீ எல்லாம் ஒரு மனிசனா, ஒரு பொண்ண போய் கை நீட்டி அடிக்கிற" என்று ஜகன் எகிறிக் கொண்டு வர


        அவன் புறம் திரும்பிய ஆதி


    " நீ இன்னும் எவ்வளவு தான் டா என் முதுகுலே குத்துவ" என்று 

பிசிர் தட்டிய குரலில் கேட்க 


ஜகன் : "

அது அது நான் எதுவும் பன்னலயே "


        ஆதி: " த்ரீ இயர்ஸ் முன்னாடி எனக்கும் அபிக்கும் ஆக்ஸிடென்ட் நடந்தப்ப நீ எங்கே இருந்த" 

     

         ஜகன் : " ஷீபா ஊர்ல இருந்தன்" 


      " மறுபடி மறுபடி ஏன்டா பொய் பேசுற, ஏன்டா எனக்கு துரோகம் பன்ன, என் குழந்தை எங்கடா" 


    என்று ஆதி ஜகனின் சர்ட் காலரைப் பிடித்து இழுத்த படி கலங்கிய கண்களுடன் கேட்டான்.


      " என்ன டா பன்ன , என்னடா பன்ன என்று கேக்குற நான் தான் உன் பொண்டாட்டிய கொலை பன்னேன் போதுமா" 


       என்று உரத்த குரலில் கத்தி இருந்தான்  ஜகன்.


        இதுவரையும் கீழே அமர்ந்த படி இவர்களது


      சம்பாசனையை கேட்ட காயத்ரி 


" அச்சச்சோ பாவம் " என்று உச்சுக் கொட்ட


        " என்னடா சொல்ற என் அபிய நீ தான் கொன்னியா " 


       என்று அதிர்ச்சியில் கேட்ட ஆதி


      தாங்கிக் கொள்ள முடியாத துரோகத்தின் பலனாக 


      " தொப் " என்று தரையில் மண்டியிட்டு அமர்ந்து விட்டான்.


         நண்பனின் துரோகம் அவன் நெஞ்சை அழுத்த  


        ஆதியின் கண்களில் இருந்து நீர் நிறைந்தது.



              தொடரும்.....

✍️  Muhsina saththar.

 

No comments