Breaking News

ரிஷாட் MPயின் வழக்கு ஒத்திவைப்பு ?

அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான அல்ஹாஜ் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் அடிப்படை உரிமை மீறல் வழக்கு இன்று 04.06.2021 வெள்ளிக்கிழமை உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது .

இதன் போது உயர் நீதிமன்ற நீதியரசர்களில் ஒருவரான கொளரவ நீதியரசர் கோடா கொட தனிப்பட்ட காரணங்களுக்காக வழக்கு விசாரணையில் இருந்து தவிர்த்து கொள்வதாக அறிவித்தார்.

எனவே இதை தொடர்ந்து வழக்கு விசாரணை எதிர் வரும் 11/06/2021 வரை ஒத்திவைக்கப்பட்டது.

இவ் வழக்கு விசாரணையில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பாயிஸ் முஸ்தபா, அனில் சில்வா , சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஸ்தி ஹபீப் மற்றும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும் சட்டத்தரணியுமான அமீர் அலியும் ஆஜாராகினர்.

சிரேஷ்ட சட்டத்தரணி கெளரி தவராசா அவர்களின் வழிகாட்டலில் இடம் பெற்றுவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

No comments